அது ஒரு அழகிய கிராமம்..இயற்கை வனப்பு காட்டியிருந்தாலும்....நகரங்களின் அதிநவீனம் அங்கு போய் இன்னும் சேரவில்லை..ஒரு நாள் காலையில் எனது கனோன் கமராவை தூக்கி கொண்டு அங்கு போனேன்..குளத்தில் இருந்து நீர் வரும் வாய்க்காலில் சில சிறுவர்களும் சிறுமியரும் குதித்து குதித்து நீராடிக் கொண்டு இருந்தனர். நான் கமராவை தூக்கியதும் அண்ணை என்னை எடுங்கோ...அண்ணை என்னை எடுங்கோ..என என்னை சுற்றி கொண்டு கமராவின் லென்ஸை பிடித்து கொள்ள அருகே வந்தனர். அவர்களை குளிக்கும் போது இயல்பாக எடுக்க முயற்சித்தும்..சரி வரவில்லை..அப்போது இந்த பெண் அமைதியாக வந்து "அண்ணை என்னை தங்கச்சியையும் ஒருக்கா எடுத்து விடுங்கோ" என்றாள்..அந்த படங்கள் தான் இது.

இடம் முத்துஐயன்கட்டு, வன்னி, ஈழம் (முத்துஐயன்கட்டு பற்றிய அறிய
(வசந்தனின் பதிவு)
நாள் 15-06-2005
பொழுது மாலை 4.30